![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-03-at-20.25.44-e1614783451532.jpeg?fit=1024%2C649&ssl=1)
இலங்கை அரசாங்கத்தின் ஆணவப் போக்கே சர்வதேசத்தில் பகையை வளர்த்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டத் தவறியதானது, இந்த அரசாங்கத்தின் தோல்வியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், இராஜதந்திரம் என அனைத்து துறைகளையும் செழித்தோங்கச் செய்வதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களுக்கு நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாகவும் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
பூகோள அரசியலைப் புரிந்துகொள்ளாமல் இராஜதந்திர ரீதியாகவும் அரசாங்கம் தோல்வியுற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வலுக்கட்டாயமான செயற்பாடுகளால் நாடும், நாட்டு மக்களும் பல்வேறு எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய எச்சரித்துள்ளார்.