May 29, 2025 10:15:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்றாவது நாளாகவும் தொடரும் வடக்கு சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இவ்வாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்ததுடனும், போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவும் குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிரந்தர நியமனம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேருக்கும் உரிய தீர்வினை வழங்குமாறும் நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரியும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.