May 30, 2025 14:10:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் போர் விமானங்களை இலவசமாக பெற இலங்கை பேச்சுவார்த்தை!

(File Photo – airforce.lk)

இலங்கை அரசாங்கம்  கடல் எல்லை பாதுகாப்பு குறித்து கூடிய கவனம் செலுத்தி வரும் நிலையில் இதற்காக இந்தியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து தாலா இரண்டு போர் விமானங்களை இலவசமாக  பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்த இரு நாடுகளுடனும் முன்னெடுக்கப்படுவதாக விமானப்படை பேச்சாளர் துசான் விஜேசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் தற்கால சவால்களாக கடல் எல்லை பாதுகாப்பு காணப்படுகின்றது, கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதுடன், இலங்கைக்குள்ளும் போதைபொருள் கொண்டுவரப்படுகின்றது என அவர் கூறினார்.

அத்தோடு இலங்கை கடல் எல்லை சர்வதேச போதைப்பொருள் வியாபாரத்தின் முக்கிய மையமாக கருதப்படுகின்றது எனவும் விமானப்படை பேச்சாளர் துசான் விஜேசிங்க தெரிவித்தார்.