October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவுக்கு ரவூப் ஹக்கீமே காரணம்”: ருவான் விஜேவர்தன

ஐக்கிய தேசியக் கட்சி  இரண்டாக பிளவடைந்தமைக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட பிரதிநிதிகளின் கூட்டத்திலேயே ருவான் விஜேவர்தன இதனை கூறியுள்ளார்.

ரவூப் ஹக்கீம் இரகசிய பேச்சுக்களை நடத்தி சஜித் தரப்பினரை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியில் இழுத்துச் சென்றுள்ளதாக இதன்போது ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பிளவடைந்த கட்சியை ஒன்றிணைக்கும் வேலைத் திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருவதாகவும், இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் நிறத்தை ஒருபோதும் மாற்ற மாட்டோம் என்றும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.