October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கூட்டமைப்பில் ஒரு கட்சி அதிகாரம் செலுத்தக் கூடாது’: டெலோ

File photo

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்தே அறிவிக்கும் என்று டெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

டெலோவின் தலைமைக்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அனைத்து அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்மானமே இறுதி முடிவாகவும் இருக்கும். ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய அபிப்பிராயங்களை தெரிவிக்கலாம். என்றார்.

நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் சம்மந்தன் ஐயாவை தலைவராக தாம் தெரிவுசெய்துள்ளதாக கூறிய அவர் சுமந்திரனை கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கும் போது அதில் தான் இருக்கபோவதில்லை என்றும் சிறிதரனின் பெயரை தாம் பரிந்துரைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்த ஒரு கட்சியும் எல்லாவற்றையும் ஆளுமை செய்கின்ற வகையில் கூட்டமைப்பு இருக்ககூடாது. பகிர்ந்தழிக்கப்படுவது பிரதானமானவிடயமாக பார்க்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்பது அந்த மரபுகளுக்கு உட்பட்டதாகதான் இருக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதற்கான தீர்வை பெற்றுத்தர சம்பந்தன் ஐயாவிடமும் கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அடுத்த நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட உள்ளது என்றார்.

கூட்டமைப்பை மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டு எந்த ஒரு கட்சியும் அதிகாரத்தை செலுத்தும் நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது என கூறிய குருசாமி சுரேந்திரன் மக்களின் விருப்பம் மற்றும் ஐக்கியத்தையே அனைத்து கட்சிகளும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.