July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

1000 ரூபா உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமான ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ‘தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம்’ கொஸ்லந்தை நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

அத்தோடு இந்தப் போராட்டத்தில் காணி உரிமை மற்றும் வீட்டு உரிமை பத்திரங்களையும் வழங்க வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்த அபேகோன், இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர், பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மேலும் இந்தப் போராட்டத்தில் நியாயமான சம்பளத்தையும் இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், மற்றும் கல்விக்கான வளங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.