February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“20 -ஆம் திருத்தம் பிரதமரின் அதிகாரத்தை குறைக்காது”: மகிந்த ராஜபக்‌ஷ

இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் பிரதமரின் அதிகாரத்தை குறைக்காது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று காலை ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆளும் கட்சியினர் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று முற்பகல் முதல் உயர் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.