July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை அரசை முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கோர்-குழு உறுப்பு நாடுகள் பருந்துரைக்க கோரியுள்ள நிலையில் தொடர்ச்சியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமே நீதியை பெற முடியும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  உறவினர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புக்கூறலை கையாள எந்த வித வாய்ப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் அணி திரழ வேண்டும் என சங்கம் தெரவித்துள்ளது.

இதற்கமைய குறித்தப் போராட்டம் எதிர்வரும் 1ம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்பாக ஆரம்பமாகி பழைய வைத்தியசாலையை சென்றடைய உள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர்  உறவினர்கள்  சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இம் மாபெரும் போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோர்  உறவினர்கள்  சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.