October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலிருந்து இரண்டாம் கட்டமாக மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்தடைந்தன

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 இலட்சம் ‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ கொரோனா தடுப்பூசிகள் இன்றையதினம் கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படுவதாக பிரதி சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இந்தியாவிடமிருந்து ஒரு கோடி (பத்து மில்லியன்) அளவிலான கொவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை பெற சீரம் நிறுவனத்துடன் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த வாரம் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஒப்புதல் அளித்திருந்த நிலையில் அதன் முதல் தொகுதியாக 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

இதேவேளை கொவெக்ஸ் திட்டத்தின் ஊடாக 264,000 தடுப்பூசிகள் எதிர்வரும் வாரம் முதல் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.