
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது.
இதனையடுத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஐந்து வருடங்களை எட்டுகின்றது. எமக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்தோடு எமது போராட்டங்களில் பங்குபற்றிய பல தாய் தந்தையர்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடனேயே உயிழந்துள்ளனர்.
எமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும்.
அந்தவகையில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் எனவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.