April 11, 2025 14:42:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக முதலமைச்சர் – இலங்கை மீன்பிடி அமைச்சர் பேசத் தீர்மானம்

மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நடத்தப்பட்ட இருதரப்பு கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி காணொளி தொடர்பு ஊடகம் மூலம் குறித்த கலந்துரையாடலை நடத்த இரு தரப்பும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

இதற்கமைய விரைவில் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.