July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் ஹரிகுப்தா ரோஹணாதீர இந்த அறிக்கையை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் செயலாளரும் கலந்து கொண்டுள்ளார்.

இதேநேரம், இந்த அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும், அறிக்கையின் பிரதியொன்று பாராளுமன்ற வாசிகசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவற்றைப் பார்வையிடவும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் இறுதி அறிக்கையின் ஆங்கில மற்றும் சிங்கள பிரதிகள் நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.