July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார சேவை ஊழியர்கள் சுகாதார அமைச்சினுள் நுழைய முயற்சித்ததால் பதற்றம்

கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட சுகாதார சேவை ஊழியர்கள் சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைய முயற்சித்ததைத் தொடர்ந்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பின் நகர மண்டப பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தால், அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று சுகாதார சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் இடையே, ஊழியர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைய முற்பட்டுள்ளனர்.

இதனால், அங்கு பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.