![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/mahinda-rajapaksa.jpg?fit=1024%2C586&ssl=1)
ஜெனீவா விவகாரம் இலங்கைக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது. பல நாடுகள் இம்முறை இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசு, ஜெனீவாவில் இலங்கையை அடகு வைத்திருந்தது. இலங்கை மக்களின் அமோக அணியுடன் எமது புதிய ஆட்சியில் நாட்டை மீட்டெடுத்து விட்டோம்.
நாட்டின் இறைமையை மீறி – மக்களின் ஆணையை மீறி நாட்டுக்கு எதிராக எந்தப் பிரேரணைகளையும் முன்வைக்க முடியாது. அதை மீறி முன்வைக்கப்படும் பிரேரணைகள் பயனற்றவையாகவே போய்விடும்.
நாம் எவருக்கும் அஞ்சவில்லை. இந்த ஜெனீவா விவகாரமும் இலங்கைக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது. பல நாடுகள் இம்முறை இலங்கைக்கு ஆதரவு வழங்கும்.
எமது நாட்டின் நிலைப்பாடுகளை ஜெனீவா அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தெளிவாக எடுத்துரைப்பார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.