![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-27-at-7.47.36-PM-e1606486784442.jpeg?fit=658%2C407&ssl=1)
இலங்கையில் இன்றைய தினத்தில் 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
79,999 ஆக அதிகரித்துள்ளது.
843 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 843 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 74,299 பேர் குணமடைந்துள்ளதுடன், 5255 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 பேர் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளது.