June 1, 2025 18:59:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் யாழில் தாய்மொழி தின நிகழ்வுகள்

‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக, வாழ்நாள் பேராசிரியர் அருணாச்சலம் சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்துகொண்டார்.

மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர்களான சட்டத்தரணி க.சுகாஸ், ந.காண்டீபன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.