July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப்போராட்டத்தில் ‘அரசியல் என்பது மக்களுக்கானது, எந்த தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்’ எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்த பழனி திகாம்பரம் தலைமையில் 2018 ஒக்டோபர் 7 ஆம் திகதி பிரவுன்ஸ்வீக், குயின்ஸ்லேன்ட் பிரிவில் 40 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன்பின்னர் நிர்மாணப்பணிகளும் பகுதியளவு ஆரம்பமாகின. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒப்பந்தக்காரர்களால் வீட்டுத் திட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பில் பயனாளிகள் ‘ட்ரஸ்ட்’ நிறுவனத்திடம் பல தடவைகள் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்காததால் வீட்டுத்திட்டத்தை உடனடியாக முன்னெடுத்து முழுமைப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

This slideshow requires JavaScript.