July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

1000 ரூபா சம்பள விவகாரம் : ”பேச்சுவார்த்தைகளை பெருந்தோட்ட கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன”

சம்பள பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பு செய்யும் நோக்கில் பெருந்தோட்ட கம்பனிகள் சூட்சுமமான வேலைகளில் ஈடுபட்டுவருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அட்டனில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி கம்பனிக்கு விற்பது என்பது வெறும் கட்டுக்கதையாகவே தாம் கருதுவதாக இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

அத்தோடு, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் ஜனநாயக போராட்டமாகும். இதில் கலந்து கொண்டவர்களை விசாரிப்பது மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதற்கு சமனானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.