October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹர்த்தால் போராட்டம்: யாழ். நகர் ஸ்தம்பிதம்

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு , கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண மக்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது. நகரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு மாணவர்களும் , ஆசிரியர்களும் செல்லாமையினால் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.