July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க தயாராகிறார்’

Photo: Facebook/ Maithripala Sirisena

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2025 இல் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசியல் கூட்டணியொன்றை கட்டியெழுப்பி ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராவதற்கான கலந்துரையாடல்களை அவர் ஆரம்பித்துள்ளதாக சிங்கள செய்தி இணையத்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போதை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவர், அங்கு இருந்துகொண்டே கூட்டணி அமைப்பதற்கான கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பாக தனது இல்லத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றுடன் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.