July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணி சுவீகரிக்கும் திட்டத்துக்கு எதிராக காரைநகரில் ஆர்ப்பாட்டம்

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடற்படையினர் பயன்பாட்டுக்கென 51 பரப்பளவையுடைய காணியை சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் இன்றைய தினம் காணி அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காரைநகர் ஜே/45 கிராமசேவகர் பிரிவில் எலறா கடற்படை தளம் அமைப்பதற்காக 62 குடும்பங்களுடைய 51 ஏக்கர் காணிகளை நில அளவைத் திணைக்களத்தால் அளவீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.