July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா விவகாரத்தில் இலங்கையின் பின்வாங்கல் ஏமாற்றம் அளிக்கின்றது: அமெரிக்கத் தூதுவர்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கும் “பாரபட்சமான” கொள்கையை முடிவுக்கு கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலேய்னா பி. டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.

ஜனநாயக அரசாங்கம் ஒன்றிடமிருந்து மக்கள் (அண்மையில் உயிரிழந்தவர்கள் உட்பட) அவர்களின் உரிமைகள் தொடர்பில் இதனைவிட கூடுதல் மரியாதையைப் பெற உரித்துடையவர்கள் எனவும் தூதுவர் டெப்லிட்ஸ் இன்று பதிவிட்டுள்எ டுவிட்டர் தகவலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை புதைக்க அனுமதி அளிக்கப்படும்
என்று அறிவித்திருந்தார்.

அப்போது அந்தக் கருத்தை வரவேற்று, அமெரிக்கத் தூதுவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

எனினும், இந்த விவகாரத்தில் நிபுணர்களின் கருத்தை மீறி நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசாங்கம் ஓரிரு நாட்களிலேயே அறிவித்து விட்டது.

இந்த நிலையிலேயே, அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.