July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே நான் பெற்றுக்கொள்வேன்’ – ஹரின்

File photo : Facebook/HarinFernando

நாட்டில் குறைந்தது ஒரு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர், முன்கள பணியாளர்களில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இலங்கையில் இன்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.