July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிணைமுறி மோசடியை விசாரிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு ஒன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரே, கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமை நீதிபதியிடம் சட்டமா அதிபர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவருகும் எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் இம் மாதம் 5ஆம் திகதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக பதவி வகித்த போது, அர்ஜுன் அலோசியஸ் பணிப்பாளராக பதவி வகித்த ‘வோல்ட் & ரோ அஸோஸியேட்ஸ்’ நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட, காசோலையை பயன்படுத்தி கொள்ளுப்பிட்டி பகுதியில் 11.68 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றை வாடகைக்குப் பெற்றமை, அதற்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் இருவருக்கும் எதிராக இக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.