April 17, 2025 11:56:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2500 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் கொட்டகலையில் இருவர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இருந்து 2500 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் இன்று கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கழிவு தேயிலையை அனுமதிப் பத்திரம் இன்றி கொட்டகலை பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு கொண்டு செல்லும் போதே, இந்த சட்ட விரோத தேயிலைப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயிலைப் பொதிகள், வாகனத்துடன் சந்தேக நபர்களும் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக விசேட அதிரடிபடையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

This slideshow requires JavaScript.