February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைந்தது!

தமிழ்க் கட்சிகளினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் ஆலய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.