May 15, 2025 21:30:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்றைய தினத்தில் 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
75,654 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த கடந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

2020 மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையில் நாட்டில்  மூவாயிரம் வரையிலானா தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்ததுடன் 12 பேரே தொற்றால் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியாகொட மீன் சந்தை கொத்தணிகளை தொடர்ந்து நாளாந்தம் தொற்றுக்கு உள்ளான 500 ற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு வருவதுடன், நாளாந்தம் மரணங்களும் பதிவாகி வருகின்றன.

865 பேர் குணமடைந்தனர்

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 865 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 68,696 பேர் குணமடைந்துள்ளதுடன், 6568 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடக்கில் 12 பேருக்கு தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில்  10 பேர் பூநகரியைச் சேர்ந்தவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.