July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கை இராணுவத்தினருக்கு ஆபத்து ஏற்பட இடமளிக்க மாட்டேன்”

இலங்கை இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதற்கோ அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கோ இடமளிக்க மாட்டேன் என்று பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் தொடர்பாக பெலியத்த பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய கொள்கைகளுக்கமைய எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் வாக்குகளை எதிர்பார்த்தே அவர்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். அவற்றை வைத்துக்கொண்டு தெற்கில் இனவாதத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.