May 15, 2025 10:34:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியது: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்றைய தினத்தில் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
74,852 ஆக அதிகரித்துள்ளது.

847 பேர் குணமடைந்தனர்

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 847 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 67,831 பேர் குணமடைந்துள்ளதுடன், 6637 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 பேர் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 390 ஆக உயர்வடைந்துள்ளது.