June 16, 2025 12:29:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் ‘இலங்கையில் தயாரிப்போம்’ வர்த்தகக் கண்காட்சி

இலங்கையின் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் ‘இலங்கையில் தயாரிப்போம்’ திட்டத்தின் வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

கண்காட்சி கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது.

வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்சவின் வழிகாட்டலின் கீழ், இந்தக் கண்காட்சியை தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்துள்ளது.

‘இலங்கையில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இலங்கையின் தொழில்முனைவோர்களையும் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கவும், அவர்களுக்கான புதிய சந்தை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.