May 23, 2025 12:31:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கை ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வக்குமார், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் சத்தியமூர்த்தி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.