July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்’

இலங்கையில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்படி ரயில் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மேலதிக நேர கடமையில் ஈடுபட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சரியான நேரத்தில் ரயில் சேவைகளை நடத்த முடியாத நிலைமை ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.