
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க தூதுவர் வரவேற்றுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டே, பிரதமரின் அறிவிப்பை அமெரிக்கத் தூதுவர் அலேய்னா பி. டெப்லிட்ஸ் வரவேற்றுள்ளார்.
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு குறித்த செய்திகளை தான் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுகாதார நடைமுறைகள் மற்றும் மத உரிமைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது சாதகமான செயற்பாடாகும் என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
Welcome media reporting on PM’s announcement to end mandatory cremation of COVID victims. Implementation of a revised practice that is in line with international public health norms and respects religious rites is a positive action.
— Ambassador Julie Chung (@USAmbSL) February 10, 2021