July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்தப்படும்: பிரதமர் மஹிந்த உறுதி

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்து மீறும் இந்திய மீனவர் விவகாரம் தொடர்பாக நாளை (26) இந்திய பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற வட மாகாண மீனவ சங்கங்களுடனான சந்திப்பின்போதே, பிரதமர் மஹிந்த இதனை கூறியுள்ளார்.

நாளை இந்திய பிரதமருடன் வீடியோ தொழில்நுட்பம் ஊடாக தான் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாகவும், இதன்போது இந்திய மீனவர்களின் அத்து மீறல் பிரச்சினை தொடர்பாக அவரின் கவனத்துக்கு கொண்டு வந்து அந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மீனவர்களிடம் மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

இதேவேளை இலங்கை கடலுக்குள் அத்து மீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த கடற்படை அதிகாரிகளுக்கு அவர் அறிவித்துள்ளார்.