June 12, 2025 7:47:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை நீதியரசர்கள் குழாம் நியமனம்!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற மனுக்களை பரிசீலிக்க 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரசங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் இதுவரையில் 18 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை பரிசீலிக்கவென ஜயந்த ஜயசூரிய , புவனேக அலுவிஹாரே , பிரியந்த ஜயவர்தன , விஜித் மலல்கொட , சிசிர டி அப்ரூ ஆகிய 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மனுக்கள் செப்டம்பர் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.