October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்க இலங்கையின் எதிர்க்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் வேண்டும்’

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க எதிர்க்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் விஜயம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கைக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு உள்ளிட்ட இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒதுக்கித்தருமாறு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவருக்குக்கூட நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரை எதிர்க்கட்சியினர் சந்திக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாகவும் ஜனநாயக நாடு என்ற ரீதியில் இம்ரான் கானை சந்திக்க எதிக்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.