July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காத்தான்குடியில் பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பகுதிகள் இன்று காலை முதல் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய காத்தான்குடி- 166 ஏ கிராம சேவகர் பிரிவில் மோதினாரி வடக்கு, சின்னதோன வீதி, கபூர் பிளேஸ், டெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு வீதி, பௌசி மாவத்தை ஆகிய பகுதிகள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இஸ்மாத் மாவத்தை மற்றும் மீதெனிய கிராமசேவகர் பிரிவில் வரகாமுர பிரதேசமும் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.