May 28, 2025 23:00:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்களின் போராட்டத்தில் ஜனாதிபதி, பிரதமரின் உருவ பொம்மைகளை எரிக்க முற்பட்டதில் பதற்றம்!

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று முன்னெடுத்த போராட்டத்தின் போது பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளி சர்ச்சை  காரணமாக அநீதி இழைக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவ பொம்மைகளுக்கு தீ வைக்க முயன்றதையடுத்து, சிவில் உடையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உருவ பொம்மைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போதே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.