July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ; அரச பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

நிதி அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் போக்குவரத்துத் துறைக்கு ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்ட சலுகைகள் இதுவரை வழங்கப்படாமையை முன்னிறுத்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தலைவர் சரத் விஜித குமார தெரிவித்தார்.

குத்தகை நிறுவனங்கள் நிவாரணம் வழங்குவதில்லை என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய மத்திய வங்கியிடமிருந்து தமக்கு நிதி கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அனைத்து அரச வங்கிகளும் நிவாரணம் வழங்காத நிலையில் போக்குவரத்துச் சேவையைத் தொடர்வது மிகவும் கடினமானதாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இன்று அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.