July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பொரல்லையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாது முன்னைய அரசியல் தலைவர்கள் போன்று அரசு அதனை மறைத்து வைக்குமானால் எமது நாட்டில் அமைதியாக வாழ்வதற்கான சூழல் இல்லாமல் போகும் என்றார்.

மேலும் எமது நாட்டில் இனங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை பேசி தீர்வு காண்பதை விடுத்து  சர்வதேசத்தை நாடுவதால் மீண்டும் எமது நாட்டின் சுதந்திரம் பறிபோகும் அபாய நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் ஆண்டகை குறிப்பிட்டார்.