June 12, 2025 11:20:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இத் தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான  அமைப்பினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பழைய வைத்திய சாலை முன்பாக இன்று காலை 10.30 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பமாகி பேரணியாக பழைய கச்சேரி வரை சென்றது.

போராட்டத்தின் நிறைவில் குறித்த அமைப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள ஐ.நா வுக்கான மகஜர் வாசிக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ் மாநகர சபை மேயர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.