July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடமையை நிறைவேற்றியமைக்காக மியன்மார் தேர்தல் அதிகாரிகள் கைதானமை துரதிஸ்டவசமானது: இலங்கை தேர்தல் அதிகாரிகள்

File Photo : Twitter /@Reaproy

சட்டம் தங்களுக்கு வழங்கிய சட்டப்பூர்வமான கடமையை முன்னெடுத்த தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்  கைது செய்யப்பட்டுள்ளமை துரதிஸ்டவசமானது என இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமால் புஞ்சிவேவ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் அறிக்கையில், மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி குறித்து கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் அரசியல் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகளை உடனடியாக விடுவிக்குமாறு அந்நாட்டு இராணுவத்தை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அவர்களின் விடுதலைக்காக ஜனநாயகத்தின் மீது பற்று கொண்ட அனைவரும் வேண்டுகோள் விடுக்குமாறு குறித்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.