
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பேரணி, மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொத்துவிலில் இருந்து பொலிகண்டி நோக்கி இன்று காலை பேரணி ஆரம்பமாகியுள்ள நிலையில், மன்னார் நீதிமன்ற நியாதிக்க எல்லைக்கு உற்பட்ட பகுதிக்குள் குறித்த பேரணியானது பயணிப்பதற்கு தடை விதிக்குமாறும் மற்றும் மன்னாரில் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது என்று தடையுத்தரவினை பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கைக்கமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் அந்த போராட்டங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவனாது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் மாநகர சபை மேஜர் மணிவண்ணன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 14 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.