![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/09/Screenshot-2020-09-24-at-01.49.05-e1600908852717.png?fit=850%2C562&ssl=1)
வன இலாகா மற்றும் மகாவலி வலயம் என்பன வன்னி மாவட்ட மக்களுக்கு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பாகவும் அந்த மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தமது அமைச்சர்களை அனுப்பி ஆராயுமாறு பிரதமரை கேட்டுக்கொள்வதாகவும் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.