October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீளக் குடியேற்ற வேண்டும்” – சரத் வீரசேகர கோரிக்கை!

யுத்த காலத்தில் வடக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வெளியேற்றப்பட்ட சிங்களம் மற்றும் முஸ்லிம் குடும்பங்களை அங்கு மீளக் குடியேற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதி ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கைகள் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”யுத்த காலத்தில் வடக்கில் இருந்து 25 ஆயிரம் சிங்கள குடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என்று தேடிப்பார்த்து அவர்களை மீளக் குடியேற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும்.

அத்துடன் அவர்களுக்கு வாக்கு உரிமை உள்ளதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து அதனை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.