காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் நாளை முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு தடைவிதிக்குமாறு வவுனியா பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியிருந்த நிலையிலேயே போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தடையுத்தரவு அறிவித்தல் போராட்டத்தை ஏற்பாடு செய்தி்ருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று 3 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை வவனியா ஏ 9வீதியிலோஅல்லது தபால் காரியாலயம் முன்பாகவோ, பழைய பஸ் நிலையம் முன்பாகவோ 73 வது தேசிய சுதந்திரதினத்திற்கு எதிப்பு தெரிவித்து எந்தவித ஆர்ப்பாட்டத்தையோ, பேரணிகளையோ நடத்தக் கூடாது என்று நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.