May 2, 2025 10:19:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது: இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo

இலங்கையில் இன்றைய தினத்தில் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 65,698 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 968 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 59,043 பேர் குணமடைந்துள்ளதுடன், 6,325 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7 மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை 118,000 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் இதுவரை 118,767 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்தில் மாத்திரம் 23,217 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இந்தியாவினால் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஏற்றும் நடவடிக்கை 28 ஆம் திகதி முதல் ஆரம்பமாகின என்பது குறிப்பிடத்தக்கது.