July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் 40 ஆவது தேசிய ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியனானார் ஸெலீஹா இஸ்ஸதீன்

இலங்கையின் 40 ஆவது தேசிய ஸ்குவாஷ் போட்டித் தொடரின் மகளிர் பிரிவில் பாதொம் ஸெலீஹா இஸ்ஸதீன் சாம்பியனாகியுள்ளார்.

ஸெலீஹா இஸ்ஸதீன் மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியில் சந்திமா செனாலியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார்.

இதற்கமைய, அவர் தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக தேசிய ஸ்குவாஷ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த போட்டித் தொடர், கொரோனா பரவல் காரணமாக இவ்வருடம் பெப்ரவரி முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டிருந்தது.

இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்தப் போட்டிகள் எஸ்எஸ்சீ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பாதொம் ஸெலீஹா இஸ்ஸதீன் 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.