July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தன் மீதான தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்தில் மனு

நீதிமன்ற அவமதிப்பு சம்பவத்தில் நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தன் மீதான தீர்ப்பை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரி, மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன் மீதான தீர்ப்புக்கு திருத்த விண்ணப்பம் தாக்கல் செய்யவும் ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்ற அனுமதியைக் கோரியுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் தற்போது அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 89 (டி) பிரிவைச் சுட்டிக்காட்டி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான அளவுகோள்களில் பார்க்கும் போது, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.