June 12, 2025 8:50:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போனோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சுழற்சி முறையிலான இந்தப் போராட்டம் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 6ஆம் திகதி வரை தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டத்தில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தின் போது தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும், சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.